Tuesday 22 March 2016

காப்பீட்டின் பயன் !



ez;gh;fNs !

     tho;f;if vd;gJ xU tl;lk;. ehk; tho;tjw;fhf NghLfpd;Nwhk; gy jpl;lk;. ,d;W Nghy; tajhd fhyj;jpy; vd;Wk;  ePq;fs; kfpo;r;rpahf tho -  jhq;fSf;Fk;> jq;fs; FLk;g mq;fj;jpdUf;Fk; kfpo;r;rpiaAk;> ghJfhg;igAk; mspf;Fk; jpl;lNk fhg;gPL (Insurance) MFk;.

     fhg;gPL vd;gJ (Insurance) thOk; NghJk; tho;f;iff;F gpwFk; jq;fSf;Fk; jq;fs; FLk;g mq;fj;jpdh;fSf;Fk; ghJfhg;G mspg;gNj fhg;gPL MFk;. fhg;gPL jpl;lj;jpy; 18 taJ Kjy; 60taJ tiu cs;s egh;fs; jq;fisAk; jq;fs; FLk;g mq;fj;jpdh;fisAk; fhg;gPL nra;a KbAk;.

     taJ 18 taJ Kjy; 40 taJ tiu cs;sth;fSf;F fhg;gPl;Lj;njhif (Premium) FiwthfTk; taJ $l $l fhg;gPl;Lj;njhif (Premium) rw;W mjpfkhfTk; fzf;fplg;gLfpd;wJ. vy;NyhuhYk; khjk; &.3000/- KjyPL nra;a KbAk; mjhtJ tUlj;jpw;F &.36,000/-.

fhg;gPl;bd; gad; :

1.   ehk; fhg;gPl;L jpl;lj;jpy; vd;iwf;F NrUfpd;NwhNkh me;j ehs; KjNy 15 my;yJ 20 tUl fhyj;jpw;F (36000x15) &.5,40,000 vd;why; (Sum Assured) Kjph;T njhif &.5,00,000f;F (fhg;gPL nra;Ak; egUf;F) ekf;Nfh / ekJ FLk;g ghJfhg;G nra;ag;gLfpd;wJ.

2.   xUth; 45 tajpy; NrUfpd;whh; vd;why; 65 taJ tiu (NrUk; ehs; Kjy; thOk; ehs; tiu) 20 tUlNkh my;yJ 30 tUlq;fNsh fhg;gPl;L ePl;bg;G nra;J nfhs;Sk; trjp cz;L.

3.   xNu jtizapy; fhg;gPl;L gphPkpak; njhif nrYj;Jtjhy; gphPkpaj; njhif Fiwthf fzf;fplg;gLk;. ePq;fs; tq;fpapy; xt;nthU khjKk; gphpkPaj; njhiff;F Vw;g xt;nthU khjKk; (Deposit) nra;J Nrkpf;f Ntz;Lk;. 12 khjq;fSf;F xUKiw ECS Kiwapy; jq;fsJ ghyprpf;fhd gphpkpaj;njhif fhg;gPl;L epWtdj;jpw;F nrd;W tpLk;.

Wednesday 4 November 2015

ஏழை...





பேரரசன் ஒருவன் அடுத்த நாட்டைக் கைப்பற்ற நினைத்தான்.

 பெரும்படையுடன் பனி படர்ந்த மலைகளைக் கடந்து சென்று கொண்டிருந்தான். அங்கே துறவி ஒருவர் இடுப்பில் கோவணத்துடன் தவம் செய்துக் கொண்டிருந்தார். அதைப் பார்த்த பேரரசன் அந்தத் துறவியின் மீது இரக்கப் பட்டான்.

இந்தக் குளிரில் இவர் மேலாடை இன்றி நடுங்குவாரே. இவருக்கு உதவி செய்ய வேண்டும்' என்று நினைத்தான் அவன். தன் மேலாடையைக் கழற்றி அவர் மீது போர்த்தினான்.

விழித்த துறவி, ""தாங்கள் தந்த மேலாடை எனக்கு வேண்டாம். என்னை விட ஏழை யாருக்காவது தந்து விடுங்கள்!'' என்றார்.

கோவணத் துணியைத் தவிர இவருக்கு என்று சொந்தம் ஏதும் இல்லை, இவரை விட ஏழையான மனிதர் இந்த உலகத்திலேயே யாரும் இருக்க முடியாது' என்று நினைத்தான் அவன் உங்களை விட ஏழையை நான் எங்கே காண்பேன்?'' என்று கேட்டான்.

துறவி அவனைப் பார்த்து, ""நீ யார்? இவ்வளவு பெரும்படையுடன் எங்கே செல்கிறாய்?'' என்று கேட்டார்.

பேரரசன் நான். என்னிடம் ஏராளமான செல்வங்கள் உள்ளன. பக்கத்து நாட்டைக் கைப்பற்றுவதற்காகப் பெரும்படையுடன் செல்கிறேன்!''  என்று பெருமையுடன் சொன்னான். உன்னிடமே ஏராளமான செல்வம் இருக்கும்போது, ஏன் பக்கத்து நாட்டின் மீது படை எடுக்கிறாய்?''

அந்த நாட்டுச் செல்வமும் சேர்ந்தால், நான் இன்னும் பெரிய செல்வனாகி விடமாட்டேனா? என் ஆணை அந்த நாட்டிலும் செல்லுமே!'' என்றான் அவன்.

இருக்கின்ற செல்வம் போதாது, இன்னும் வேண்டும் என்று நினைக்கிறாய். நீதான் உண்மையான ஏழை... 

நீயே போர்வையை வைத்துக் கொள்!'' என்று நீட்டினார் அவர். தலை கவிழ்ந்த அவன் படையெடுக்கும் எண்ணத்தை விட்டுவிட்டு நாடு திரும்பினான்.

R.P. Karthik's profile photoThanks to R.P.Karthik

Tuesday 17 June 2014

காப்பீட்டில் ஒருவரின் பல்வேறு பாதுகாப்புத் தேவைகள்



• வருமான பாதுகாப்பு

• மருத்துவ செலவுக்கான தேவைகள்

• குழந்தைகளின் படிப்பு

• குழந்தைகளின் திருமணம்

•பல்வேறு சொத்துக்களில் கடன்கள்

• மற்றும்  குடும்பத்தின் பராமரிப்பும்

Monday 9 June 2014

பருவ கால ஆயுள் காப்பீடு ஏன்?



ஆயுள் காப்பீடு 

  • நம் வாழ்க்கையில் ஆயுள் காப்பீடு என்பது அவசியமான ஒன்றாக உள்ளது.  நம்முடைய நிதி திட்டமிடுதலில் காப்பீடு முக்கியமானதாக உள்ளது. நம்முடைய இறப்பிற்கு பிறகு நம்மை சார்ந்தவர்களுக்கு நிதி சுமை இல்லாமல் இருப்பதற்கு ஆயுள் காப்பீடு அத்தியாவச ஒன்றாக உள்ளது. இந்த ஆயுள் காப்பீடு மொத்தத்தில் ஒரு சொத்தின் வளர்ச்சியாக உள்ளது.
  • ஆயுள் காப்பீடு நம்முடைய குடும்பதாரர்களுக்கு நிதி சார்ந்த செலவுகளில் இருந்து தீர்வு அளிப்பதோடு, நமக்கு பாதுகாப்பை அளிக்கிறது.
  • எல்லா ஆயுள் காப்பீட்டு பாலிசிகளும், பருவ கால ஆயுள் காப்பீடு அல்லது நிரந்தரமான ஆயுள் காப்பீட்டின் கீழ் உள்ளது.
  • பருவ கால ஆயுள் காப்பீட்டு பாலிசிகள்,Term policy ஒரு குறிப்பிட்ட கால காப்புறுதியில் முடிவடைகிறது. ஆனால் நிரந்தரமான ஆயுள் காப்பீடு, நம் வாழ் நாள் முழுவதற்கு காப்புறுதி அளிக்கப்படுகிறது. இருப்பினும், இந்த இரண்டு காப்பீட்டு பாலிசிகளுக்கு பிரீமியம் கட்டாயம் செலுத்தியாக வேண்டும்.

பருவ கால ஆயுள் காப்பீடு ஏன்? Term policy

  • பருவ கால ஆயுள் காப்பீடு, ஆயுள் காப்பீட்டிற்கு முதன்மையாக திகழ்கிறது.
  • இந்த பருவ கால ஆயுள் காப்பீடு, சுலபமானதாகவும், நம்மால் ஏற்றக்கொள்ள கூடிய அளவில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
  • பருவ கால ஆயுள் காப்பீடு, நம் வாழ்நாளுக்கு தேவையான காப்புறுதி மட்டுமே கொடுக்கிறது. ஆனால் ரொக்க மதிப்பை பெருக்குவதில்லை.
  • நிரந்தர ஆயுள் காப்பீட்டை காட்டிலும் பருவ கால ஆயுள் காப்பீடு குறைந்த பிரீமியத்தை கொண்டதாக உள்ளது.
  • தற்சமயம், நிறைய காப்பீட்டு நிறுவனங்கள், பருவ கால ஆயுள் காப்பீட்டிலிருந்து, நிரந்தர காப்பீட்டு பாலிசிகளுக்கு மாற்றி கொள்ளும் வசதியையும் ஏற்படுத்தி கொடுத்துள்ளன.
பருவ கால ஆயுள் காப்பீடுகள் உத்திரவாத தரத்தை அளிக்கின்றன

ஆயுள் காப்பீட்டுப் பாலிசி

எவ்வாறு ஆயுள் காப்பீட்டுப் பாலிசியைப் புரிந்துகொள்வது?

 ஆயுள் காப்பீட்டு பாலிசியைப் புரிந்துகொள்ள கீழ்கண்ட தொடர்கள் பற்றி தெரிந்துகொள்வது இன்றியமையாதது:

பிரீமியம் - உங்கள் காப்பீட்டுப் பாதுகாப்பைத் தொடர நீங்கள் செலுத்த வேண்டிய தொகை.

பிரீமியத் தொகை பின்வருவனவற்றைச் சார்ந்துள்ளது
      •     உங்கள் வயது
      •     தேர்ந்தெடுத்த பாலிசி
      •     பிரீமியம் செலுத்தும் முறை
      •     பிரீமியம் செலுத்தும் காலவரை
      •     பாலிசி காலவரை

     
மாதம் ஒருமுறை (உங்கள் ஊதியத்திலிருந்து கழிக்கப்பட்டதாக), காலாண்டு, அரையாண்டு அல்லது ஆண்டுக்கு ஒருமுறை என்ற பிரீமியத்தைச் செலுத்தும் முறையைத் தேர்வுசெய்யலாம். எனினும், ஒருமுறை மட்டுமே செலுத்தும், சிங்கிள் பிரீமியம் பாலிசிகளும் உள்ளன (எனவே நீங்கள் பிரீமியத்தைத் தொடர்ச்சியாக செலுத்த வேண்டிய அவசியம் இருக்காது).

காலவரை - காப்பீடு எடுக்க நீங்கள் தேர்வு செய்யும் ஆண்டுகளின் எண்ணிக்கை.

நீண்ட காலவரைக்கு பிரீமியம் குறைவாக இருக்கும். பாலிசி காலவரை ஒரு ஆண்டிலிருந்து அதிகபட்சம் 55 ஆண்டுகள் வரை வேறுபடும். காலவரையின் வரம்பை அனைத்துப் பாலிசிகளும் அளிப்பதில்லை.

பிரீமியம் செலுத்தும் காலவரை - உங்கள் பாலிசிக்கு நீங்கள் செலுத்தும் பிரீமியம் ஆண்டுகளின் எண்ணிக்கை.

நீண்டகால பிரீமியம் செலுத்தும் காலவரைக்கு பிரீமியம் குறைவாக இருக்கும். வழக்கமாக பிரீமியம் செலுத்தும் காலவரை, பாலிசி காலவரை போன்றே இருக்கும். எனினும், பாலிசி காலவரையைக் காட்டிலும் குறைவாக இருக்கும் பிரீமியம் செலுத்தும் காலவரையைத் தேர்ந்தெடுக்கும் விருப்பத்தை சில பாலிசிகள் உங்களுக்கு அளிக்கின்றன.

திட்டத் தொகை / ஃபேஸ் வேல்யூ - நீங்கள் பெற்ற காப்பீட்டுப் பாதுகாப்புத் தொகை அல்லது உங்கள் மரணத்தின்போது உங்கள் குடும்பம் பெறுகிற குறைந்தபட்ச தொகை.

பாலிசி வகை அல்லது நீங்கள் தேர்ந்தெடுத்த ரைடர்ஸின் அடிப்படையில் இந்தத் தொகையைக் காட்டிலும் அதிகமாக உங்கள் குடும்பம் பெற முடியும்.

போனஸ் / லாபத்தில் பங்கெடுத்தல் - திட்டத் தொகையின் வீதமாக ஒவ்வொரு ஆண்டும் காப்பீட்டு நிறுவனத்தால் அறிவிக்கப்படுகிறது. இந்தத் தொகை வேறுபடும்; வேறுபட்ட பாலிசிகள் மற்றும் காலவரைக்கு ஏற்ப அது வேறுபடும்.

ஒவ்வொரு வருடமும் அறிவிக்கப்பட்டிருந்தாலும், மொத்தப் பணமாகச் செலுத்தும் போனஸானது, முதிர்விற்குப் பிறகு காப்பீடு எடுத்த நபருக்கோ அல்லது இறப்பிற்குப் பிறகு அவருடைய குடும்பத்திற்கோ திட்டத் தொகைக்குக் கூடுதலாக வழங்கப்படுகிறது.

எதிர்கால செயல்திறன் பற்றிய காப்பீட்டு நிறுவனத்தின் யூகங்களின் அடிப்படையில் போனஸ் உள்ளது. பிற எந்த யூகத்தைப் போன்று, உண்மையான முடிவுகள் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இருக்கும். நீண்டகாலத் திட்டங்களுக்கு கணிக்கப்பட்ட மதிப்புகளிலிருந்து வேறுபடும் வாய்ப்புகள் அதிகம். ஒவ்வொரு பாலிசிக்கும் போனஸ் தொகை பற்றிய உத்தரவாதத்தை அனைத்து நிறுவனங்களும் அளிப்பதில்லை.

கூடுதல் உத்தரவாதம் - காப்பீட்டு நிறுவனத்தால் அறிவிக்கப்படுகிறது; நிறுவனத்தின் நிதிசார்ந்த முடிவுகள் சார்ந்து அமையாது, காப்பீடு எடுத்தவருக்கோ அல்லது நியமனதாரருக்கோ பணத்தின் உத்தரவாதத் தொகையை நிறுவனம் கொடுக்கும்.

போனஸ் தொகையைப் போன்று, முதிர்விற்குப் பிறகு காப்பீடு எடுத்த நபருக்கோ அல்லது இறப்பிற்குப் பிறகு அவருடைய குடும்பத்திற்கோ திட்டத் தொகைக்குக் கூடுதலாகவோ இது வழங்கப்படுகிறது.

சர்வைவல் பலன் - பாலிசி காலவரையை முழுமையாக முடிக்கும் நிலையில், காப்பீடு எடுத்த நபர் தொடர்ச்சியான இடைவெளிகளில், முன்பே உறுதிசெய்து பெறும் தொகை.

அடிக்கடி, முதிர்வு அல்லது பாலிசி காலவரை முடிவில் பெறும் பணம் சர்வைவல் பலன் என்று குறிப்பிடப்படுகிறது.

முதிர்வு பலன் - பாலிசி காலத்தை முழுமையாக முடிக்கும் நிலையில், காப்பீடு எடுத்தவர் பெறக்கூடிய தொகை.

பாலிசிகள் போனஸை வழங்கினால், பாலிசி காலவரைக்கான போனஸுடன் திட்டத் தொகையையும் சேர்த்து காப்பீடு எடுத்தவருக்கு முதிர்வின் போது வழங்கப்படும். கூடுதலாக, சில பாலிசிகள் ஊக்கத் தொகையை வழங்குகிறது, அவை பாலிசி காலவரையை அடிப்படையாகக் கொண்ட திட்டத் தொகையின் ஒரு பகுதியாகும்.

பாலிசிகள் போனஸை வழங்கவில்லையென்றால், முதிர்வின் போது, திட்டத் தொகை அல்லது பிரீமியத்தை திரும்ப பெறுவது போன்ற எதுவும் காப்பீடு எடுத்தவருக்கு கிடைக்காது (தேர்வு செய்த பாலிசி வகையைப் பொறுத்தது).

காப்பு அல்லது இறப்பு பலன் - காப்பீடு எடுத்தவர் இறக்கும்போது, நியமனதாரர் காப்பீட்டு நிறுவனத்திலிருந்து பெறும் பணம். திட்டத் தொகையுடன் போனஸ் (ஏதும் இருந்தால்) பெறுவார்.

விபத்து இறப்பு பலன் அல்லது கூடுதல் திட்டத் தொகை போன்ற ரைடர்களை கூடுதலாகத் தேர்வு செய்திருந்தால், நியமனதாரர் அதிக பணத்தைப் பெறுவார்.

வருவாய்கள் அல்லது வரிக்கு முந்தைய ஈட்டுத்தொகைகள் - கூடுதல் அடிப்படையில் பிரீமியத்தில் சம்பாதித்த வட்டி, வரிக்கு முந்தைய ஈட்டுத்தொகையாக உள்ளது.

வரிக்குப் பிந்தைய ஈட்டுத்தொகை-ஆயுள் காப்பீட்டுப் பாலிசிக்குச் செலுத்தப்பட்ட பிரீமியத்தை, வரிச் சட்டம் 80C பிரிவின் படி, வரிக் கட்டணமாகப் பயன்படுத்தியிருந்தால், காப்பீடு எடுத்தவர் செலுத்த வேண்டிய பிரீமியம் குறையும். கூடுதல் அடிப்படையில் செலுத்த வேண்டிய பிரீமியத்திலிருந்து சம்பாதித்த வட்டி, வரிக்குப் பிந்தைய ஈட்டுத்தொகை என அழைக்கப்படுகிறது.

பழைய பாலிசியைப் புதுப்பிக்க முடியுமா ?



ரெகுலர் பிரீமியம் செலுத்தும் பாலிசிக்கு, கெடு தேதியின் 30 நாட்களுக்குள் பிரீமியம் செலுத்தப்பட வேண்டும் (மாதாந்திர முறைக்கு 15 நாட்கள்). நீங்கள் பிரீமியத்தைச் செலுத்தி, பாலிசியை செயல்பாட்டில் வைத்திருக்க காப்பீட்டு நிறுவனம் சலுகை காலத்தை வழங்குகிறது. சலுகை காலத்திற்குள் பிரீமியத்தை செலுத்தவில்லையென்றால், பாலிசி முடிந்ததாகக் கருதப்படுகிறது.

முடிந்த பாலிசிகளைப் புதுப்பிக்கும் செயலை எளிதாக்கக்கூடிய, பல்வேறு திட்டங்களை காப்பீட்டு நிறுவனங்கள் வழங்குகின்றன. அவற்றில் சில கீழே குறிப்பிடப்பட்டுள்ளன -

பிரீமியத்தின் அனைத்து நிலுவைகளையும், அந்த காலத்திற்கான வட்டியையும் செலுத்தினால் பாலிசியைப் புதுப்பிக்கலாம். குறிப்பிட்ட பாலிசிகளில், ரெகுலர் பிரீமியத்துடன் சேர்த்து நிலுவையின் ஒரு பகுதியை செலுத்தும் புதுப்பிப்பு தவணை திட்டத்தை நிறுவனம் வழங்குகிறது, மீதமுள்ள புதுப்பித்தல் தொகையை இரண்டு வருடங்களில் செலுத்த வேண்டும்.

மற்றொரு திட்டத்தில், வட்டியுடன் பிரீமியத்தைச் செலுத்த, பாலிசியில் உள்ள பலனைப் பயன்படுத்தி (ரெகுலர் இடைவெளியில் காப்பீட்டு நிறுவனத்திலிருந்து பெறக்கூடிய பணம்) மணி பேக் பாலிசியைப் புதுப்பிக்க முடியும். (புதுப்பிப்பு மதிப்பைவிட சர்வைவல் பெனிஃபிட் தொகை குறைவாக இருந்தால், மீதமுள்ள தொகையைச் செலுத்த வேண்டும், அதிகமாக இருந்தால், உபரித் தொகையைப் பெறுவீர்கள்.)

பிரீமியத்தைச் செலுத்தி, பாலிசியை செயல்பாட்டில் வைத்திருக்க


நான் சில காலம் பிரீமியத்தைச் செலுத்தவில்லை. எனது பாலிசியைத் தொடர விரும்பவில்லை. காப்பீட்டு நிறுவனத்திலிருந்து எதையும் பெற முடியுமா?

நீங்கள் பிரீமியத்தைச் செலுத்தி, பாலிசியை செயல்பாட்டில் வைத்திருக்க, காப்பீட்டு நிறுவனம் சலுகை காலத்தை வழங்குகிறது. ரெகுலர் பிரீமியம் செலுத்தும் பாலிசிக்கு, கெடு தேதியின் 30 நாட்களுக்குள் பிரீமியம் செலுத்தப்பட வேண்டும் (மாதாந்திர முறைக்கு 15 நாட்கள்).
 
பாலிசி வாங்கியதிலிருந்து 3 ஆண்டுகளுக்குப் பிரீமியத்தைச் செலுத்தவில்லையென்றால், காப்பீட்டு நிறுவனத்திலிருந்து எந்தப் பணத்தையும் திரும்பப்பெற முடியாது
தொடர்ந்து 3 ஆண்டுகளுக்கு மேலாக நீங்கள் பிரீமியத்தை செலுத்தியிருந்தால், பிரீமிய கட்டண எண்ணிக்கை மற்றும் பாலிசி காலவரையின் திட்டமிட்ட தொகை, சேர்ந்துள்ள போனஸைப் பொறுத்து; பிரீமிய கட்டணத்தின் விகிதத்தைப் பெறுவீர்கள் (பெறக்கூடிய தொகை சரண்டர் மதிப்பாக அறியப்படுகிறது.)
 
இருப்பினும், நிறுவனம் மற்றும் பாலிசிக்கு ஏற்ப சரண்டர் மதிப்பு மாறுபடும் என்பதை கவனத்தில் கொள்ளவும்.
 
சரண்டர் மதிப்பு பின்வருவனவற்றைச் சார்ந்துள்ளது
  - பாலிசி வகை
  - பிரீமியத் தொகை
  - பாலிசி காலவரை
  - பிரீமியம் செலுத்தப்பட்ட ஆண்டுகளின் எண்ணிக்கை
  - சேர்ந்துள்ள போனஸ், ஏதும் இருந்தால்.